2025 ஜூன் 23, திங்கட்கிழமை

‘அரசியல்வாதிகளின் பெயர்களை அரச நிறுவனங்களுக்கு வைக்க முடியாது’

Editorial   / 2019 ஜூலை 17 , பி.ப. 12:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயிருடன் இருக்கும் அரசியல்வாதிகளின் பெயர்களில் அரச நிறுவனங்களை பெயரிடும் நடவடிக்கை எதிர்காலத்தில் இடம்பெறாதென, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

குறிப்பாக விளையாட்டு மைதானங்கள், பாடசாலைகள் உள்ளிட்ட அரச நிறுவனங்களுக்கு அரசியல்வாதிகளின் பெயர்களை வைப்பது சிறந்த விடயமல்ல எனத் தெரிவித்துள்ளார்.

சிங்கள வானொலி சேவையொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

3 மாதங்களுக்கு முன்னர், சகல அரசியல்கட்சிகளுக்கு அறிவித்தோம். 75 சதவீதமான அ​ரசியல் கட்சிகள் இதற்கு ஆதரவு தெரிவித்ததாகவும் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .