Mayu / 2026 மே 21 , மு.ப. 11:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
கேகாலை – கரடுபான பகுதியில் உள்ள இறைச்சிக் கடை ஒன்றில் சட்டவிரோதமான முறையில் எறும்புண்ணி (Pangolin) இறைச்சி விற்பனை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து அக் கடையின் உரிமையாளருக்குக் கேகாலை நீதவான் நீதிமன்றம் 60,000 ரூபா அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.

கரடுபான பகுதியில் உள்ள இறைச்சிக் கடை ஒன்றில் சட்டவிரோதமான முறையில் எறும்புண்ணி (Pangolin) இறைச்சி விற்பனை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து அக் கடையின் உரிமையாளருக்குக் கேகாலை நீதவான் நீதிமன்றம் 60,000 ரூபா அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.
"கரடுபான பகுதியிலுள்ள இறைச்சிக் கடையொன்றில் அரிய வகை வனவிலங்கான எறும்புண்ணியின் இறைச்சி இரகசியமாக விற்பனை செய்யப்படுகிறது" எனப் புலத்கொகுபிட்டிய வனவிலங்கு அலுவலக அதிகாரிகளுக்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இத்தகவலின் அடிப்படையில் அதிகாரிகள் குறித்த கடையில் அதிரடிச் சோதனையை மேற்கொண்டனர்.
இந்தத் திடீர் சுற்றிவளைப்பின் போது, அந்தக் கடையிலிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 750 கிராம் எறும்புண்ணி இறைச்சி அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது. மேலும், கைப்பற்றப்பட்ட குறித்த இறைச்சியானது முற்றிலும் அழுகிய நிலையில் இருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, சட்டவிரோதமாகப் பாதுகாக்கப்பட்ட வனவிலங்கின் இறைச்சியைக் கைவசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கடையின் உரிமையாளர் உடனடியாகக் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கேகாலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே, அவருக்கு 60,000 ரூபா அபராதம் விதித்து நீதவான் உத்தரவிட்டார்.
வனவிலங்கு மற்றும் தாவரப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், எறும்புண்ணி என்பது இலங்கையில் கடுமையாகப் பாதுகாக்கப்படும் ஓர் அரிய பாலூட்டி உயிரினமாகும். இவ்வகை உயிரினங்களை வேட்டையாடுதல், அவற்றின் இறைச்சியை விற்பனை செய்தல் அல்லது கைவசம் வைத்திருத்தல் தண்டனைக்குரிய கடுமையான குற்றமாகும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இதேவேளை, இதுபோன்ற வனவிலங்கு குற்றச்செயல்கள் தொடர்பான தகவல்கள் ஏதேனும் தெரிந்தால், அதனை 1992 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்குத் தொடர்பு கொண்டு பொதுமக்கள் அறியக்கலாம் எனவும் வனவிலங்கு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
31 minute ago
41 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
41 minute ago
50 minute ago