2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

’ஆஜராகுமாறு அறிவிக்கப்படவில்லை’

Editorial   / 2019 ஜூலை 29 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில், ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவில் மீண்டும் முன்னிலையாகுமாறு தனக்கு அறிவிக்கப்படவில்லை என, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

கண்டியில் இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

அத்துடன், அழைப்பு விடுக்கப்பட்டால் அதற்கு ஒத்துழைப்பு வழங்க தான் தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் புதன்கிழமை முன்னிலையாகுமாறு இன்றைய தினம் உத்தியோகப்பூர்வமாக இராணுவ தளபதிக்கு அறிவிக்கப்படும் என, தெரிவுக்குழு உறுப்பினர் ஆசு மாரசிங்க தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .