2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

இங்கிலாந்திலிருந்து பழைய மெத்தைகள் இறக்குமதி

Editorial   / 2019 ஜூலை 09 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்திலிருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்டுள்ள பாவனையின் பின்னர் ஒதுக்கப்பட்ட மெத்தைகள் அடங்கிய 98 கொள்களன்கள் கொழும்பு துறைமுகத்திலிருந்து சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த கொள்களனிலிருந்து காபட், பிளாஸ்டிக், பொலித்தின், இறந்த தாவரங்கள், பறவைகளின் இறக்கைகள்  உள்ளிட்ட பல பொருள்கள் மீட்கப்பட்டுள்ளன.

மத்திய சுற்றாடல் அதிகார சபையின் அனுமதி இல்லாமல் இந்த பழைய மெத்தைகள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

102 கொள்களன்களில் கொண்டுவரப்பட்டுள்ளதாக, இதனை இறக்குமதி செய்த நிறுவனம் நேற்றைய தினமே, சுங்க திணைக்களத்துக்கு அறிவித்ததாகவும், இதற்கமையவே, சுங்க அதிகாரிகளால் 98 கொள்களன்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .