Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 செப்டெம்பர் 20 , பி.ப. 03:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
2025 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 5,101,516 பேர் சோதனையிடப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 104,602 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இன்று (20) இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த நபர்களில் 4630 பேர் குற்றங்களுக்காக நேரடியாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
2025 ஆம் ஆண்டின் இதுவரை நடத்தப்பட்ட பொலிஸாரின் நாளாந்த சோதனையில் 955 கிலோகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் 1,422 கிலோகிராம் ஐஸ், 471 கிலோகிராம் ஹஷிஷ், 29 கிலோகிராம் கொக்கேய்ன், 13,773 கிலோகிராம் கஞ்சா, 3.5 மில்லியன் போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதுதவிர 61 டி-56 மற்றும் 62 கைத்துப்பாக்கிகள் உட்பட 1,721 ஆயுதங்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. R
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago