2025 செப்டெம்பர் 11, வியாழக்கிழமை

இந்தியா - அமெரிக்கா வர்த்தக பேச்சு தொடர்கிறது

Freelancer   / 2025 செப்டெம்பர் 11 , மு.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்​தி​யா, அமெரிக்கா இடையே வர்த்தக பேச்​சு​வார்த்தை தொடர்​கிறது என்​றும், பிரதமர் மோடி​யுடன் பேச ஆவலாக உள்​ளேன் என்றும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார். 

இதற்கு பதில் அளிக்​கும் வகை​யில், ட்ரம்​புடன் பேச நானும் ஆவலாக உள்​ளேன் என பிரதமர் மோடி தெரி​வித்​துள்​ளார்.

 அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலை​தளத்தில் வெளி​யிட்ட பதி​வில், 

“இந்​தி​யா, அமெரிக்கா இடையிலான வர்த்தக பேச்​சு​வார்த்​தை​யில் ஏற்​பட்ட தடைகளுக்கு தீர்வு காண்​பது தொடர்​பான பேச்​சு​வார்த்தை தொடர்ந்து நடை​பெறுகிறது. வரும் வாரங்​களில் என்​னுடைய சிறந்த நண்​பர் பிரதமர் மோடி​யுடன் பேச ஆவலாக இருக்​கிறேன். இரண்டு சிறந்த நாடு​களுக்கு இடையி​லான வர்த்தக பேச்​சு​வார்த்தை வெற்​றிகர​மாக முடிவுக்கு வரு​வ​தில் எந்த சிரம​மும் இருக்​காது என்று நான் உறு​தி​யாக நம்​பு​கிறேன்.” என கூறி​உள்​ளார்.

ட்ரம்​பின் கருத்​துக்கு பதில் அளிக்​கும் வகை​யில், பிரதமர் நரேந்​திர மோடி எக்ஸ் சமூக வலை​தளத்​தில்  வெளி​யிட்ட பதிவில், 

இந்​தி​யா​வும் அமெரிக்கா​வும் நெருங்​கிய நட்பு நாடு​கள், அத்​துடன் இயற்​கை​யான கூட்​டாளி​யும் கூட. இந்​தி​யா, அமெரிக்கா இடையி​லான வர்த்தக பேச்​சு​வார்த்​தை, இருதரப்பு கூட்​டாண்​மை​யின் எல்​லை​யற்ற வாய்ப்​பு​களை திறக்​கும் என்ற நம்​பிக்கை எனக்கு இருக்​கிறது. இந்த பேச்​சு​வார்த்​தையை விரைந்து முடிக்க எங்​கள் அதி​காரி​கள் குழு முனைப்​புடன் செயல்​பட்டு வரு​கிறது. நானும் ஜனாதிபதி ட்ரம்​புடன் பேச ஆவலுடன் இருக்​கிறேன். இரு நாட்டு மக்​களுக்​கும் நல்ல எதிர்​காலத்தை உறுதி செய்ய நாங்​கள் ஒன்​றிணைந்து செயல்​படு​வோம் என கூறி​யுள்​ளார். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .