2025 ஒக்டோபர் 15, புதன்கிழமை

இன்று 100 மில்லி மீற்றருக்கும் அதிக மழை

Freelancer   / 2025 ஒக்டோபர் 15 , மு.ப. 08:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் சில பகுதிகளில் இன்று 100 மில்லி மீற்றருக்கும் அதிக பலத்த மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 
 
மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், அம்பாறை மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. 
 
மேலும், மேல், தெற்கு மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலை வேளையில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 
 
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் 1 மணிக்குப் பின், மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X