2026 மே 11, திங்கட்கிழமை

‘இன்னும் தீர்மானிக்கவில்லை’

Editorial   / 2019 ஜூலை 15 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

மீண்டும் அமைச்சுப் பதவியைப் பொறுப்பேற்பது தொடர்பில், இதுவரை தீர்மானிக்கவில்லை என முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் தெரிவித்துள்ளார்.

அமைச்சுப் பதவியை பொறுப்பேற்பது தொடர்பில், தனது கட்சியுடன் நேரடி கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

எமக்கு அவசரம் இல்லை. முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் ஒன்றாக பதவி விலகினோம். அதேப்போல் பதவிகளை ​பொறுப்பேற்பதென்றால் ஒன்றாகவே பொறுப்பேற்போம். பிக்குவுக்கு பயந்து நாம் பதவி விலகவில்லை. நாட்டின் மீது இருக்கும் பற்று காரணமாகவே நாம் பதவி விலகினோம் என்று தெரிவித்துள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .