2025 ஜூன் 16, திங்கட்கிழமை

இன்று முதல் மூன்றாவது தடுப்பூசி செலுத்தும் பணிகள்

J.A. George   / 2021 நவம்பர் 01 , மு.ப. 08:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான மூன்றாவது தடுப்பூசியை செலுத்தும் நடவடிக்கை இன்று (01) ஆரம்பமாகவுள்ளது.

இதற்கான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

முதற்கட்டமாகச் சுகாதார தரப்பினர் உள்ளிட்ட முன்வரிசை சேவையாளர்களுக்குத் தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளன.

தொடர்ந்து, இரண்டாவது கட்டமாகப் பாதுகாப்பு தரப்பினருக்குத் தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளன.

தற்போது 2 மில்லியன் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ள நிலையில், தட்டுப்பாடின்றி தடுப்பூசி ஏற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் எனச் சுகாதார அமைச்சர் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .