2026 மே 10, ஞாயிற்றுக்கிழமை

dd

இம்மாத இறுதிக்குள் ’ஜனநாயக தேசிய முன்னணி’ உதயம்

Editorial   / 2019 ஓகஸ்ட் 05 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையில் ஏனைய அரசியல் கட்சிகள் இணைந்து உருவாக்கவுள்ள கூட்டணிக்கான ஒப்பந்தம் ஓகஸ்ட் மாத இறுதிக்குள் கைச்சாத்திடப்படும் என, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையில் “ஜனநாயக தேசிய முன்னணி”  கூட்டணிக்கான ஒப்பந்தம் நேற்று கைச்சாத்திடப்படும் என, ஐக்கிய தேசியக் கட்சி ஏற்கெனவே அறிவித்திருந்தது.

எனினும், அந்த கூட்டம் மற்றுமொரு தினத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி நேற்று அறிவித்தது.

இந்த நிலையில், இன்றைய தினம் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,  இந்த மாத இறுதிக்குள் ஜனநாயக தேசிய முன்னணியை உருவாக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .