2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

இராணுவ வீரர்கள் மீது கண்ணீர் புகை வீச்சு

Gavitha   / 2016 நவம்பர் 07 , மு.ப. 07:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

அங்கவீனமடைந்த இராணுவ வீரர்கள் முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டப் பேரணியின் மீது கலகம் அடக்கும் பொலிஸார், கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி, அவ்வார்ப்பாட்டத்தை கலைத்துள்ளனர்.

ஜனாதிபதி  செயலகத்துக்கு முன்பாக, கொழும்பு-காலி வீதியை மறித்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீதே இவ்வாறு கண்ணீர் புகைக்குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த இராணுவ வீரர்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக,  கொழும்பு காலிமுகத்திடலுக்கு செல்லும் வீதியில் உள்ள லோட்டஸ் சுற்றுவட்டம் தற்காலிகமாக, இன்றுக்காலை மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .