2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

இரகசிய இடமொன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்ட வசந்த

R.Maheshwary   / 2022 ஓகஸ்ட் 21 , பி.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு பேலியாகொட பொலிஸில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் வசந்த முதலிகே, விசேட விசாரணைக்காக இன்று காலை வெளியே அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்ட இடம் எது என்பது குறித்து தகவல் எதனையும் வழங்க முடியாதென, பேலியாகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் கொழும்பில் இந்த மாதம் 18ஆம் திகதி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தினையடுத்து கைதுசெய்யப்பட்ட வசந்த முதலியே உள்ளிட்ட 16 பேர் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .