2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சதீஷ் கமகே கைது

S.Renuka   / 2025 ஓகஸ்ட் 14 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சதீஸ் கமகே இன்று வியாழக்கிழமை  (14) இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதாள உலகக் கும்பல் தலைவர்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களிடமிருந்து ரூ. 100 மில்லியனுக்கும் அதிகமான இலஞ்சம் பெற்றதாக SSP சதீஸ் கமகே மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

விசாரணைகளில் இருந்து இந்த நிதி அவரது தனிப்பட்ட வங்கிக் கணக்குகளிலும், அவரது உறவினர்கள் மற்றும் கூட்டாளிகளின் கணக்குகளிலும் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அவர் இன்று (14) கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .