2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

இரண்டு அமைச்சு பதவிகளில் மாற்றம்

Editorial   / 2019 ஜூலை 26 , பி.ப. 02:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் பி. ஹரிசன் ஆகியோருக்கு  வழங்கப்பட்டுள்ள அமைச்சு பதவிகளில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரவின் பொது நிர்வாகம், அனர்த்த முகாமைத்துவம் மற்றும் கிராமியப் பொருளாதார அலுவல்கள் அமைச்சு, பொது நிர்வாகம், அனர்த்த முகாமைத்துவம் மற்றும் கால்நடை அபிவிருத்தி அமைச்சாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், அமைச்சர் பி. ஹரிசனின் கமத்தொழில், கால்நடை வளங்கள் அபிவிருத்தி, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரகவள மூலங்கள் அபிவிருத்தி அமைச்சு, கிராமியப் பொருளாதார நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரகவள மூலங்கள் அபிவிருத்தி அமைச்சாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இரு அமைச்சர்களுக்குமான நியமனக் கடிதங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி அமைச்சகத்தில் இன்று காலை வழங்கினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .