Freelancer / 2021 ஓகஸ்ட் 21 , பி.ப. 01:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
நேற்று இரவு 10 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் 10 நாட்களுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், இதன்போது வழங்கப்பட்டுள்ள அனுமதியை தவறாக பயன்படுத்தக்கூடாது என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா மக்களை எச்சரித்துள்ளார்.
இதேவேளை, டெல்டா பிறழ்வு மேலும் பரவுவதை தடுக்க சுகாதார ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் வரைவதுடன், அனைவரையும் வீட்டிலேயே இருக்குமாறும் குறிப்பிட்டார்.
அத்தியாவசிய சேவைகளான, ஆடை, கட்டுமானத் தொழிலாளர்கள், விவசாயம், சுகாதாரப் பணியாளர்கள், மருந்துகள் மற்றும் ஊடகங்களுக்கு மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும்.
மேலும் யாரை வேலைக்கு அழைக்க விரும்புகிறார்கள் என்பதை தொழில் நிறுவனத் தலைவர்களே தீர்மானிக்க முடியும்.
இருப்பினும், இந்தத் துறைகள் குறைந்தபட்ச ஊழியர்களைக் கொண்டு செயல்பட வேண்டும்.
ஏனெனில் நிலைமை தற்போது மிகவும் மோசமாக உள்ளது என இராணுவத்தளபதி கூறினார்.
பல்பொருள் அங்காடிகள், உணவக விநியோகங்கள் மற்றும் சில வங்கிகள் உட்பட மற்ற அனைத்து சேவைகளும் மூடப்பட்டிருக்கும். ஆகவே மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று வலியுறுத்தப்பட்டது.
இந்த 10 நாட்களில் தடுப்பூசி போடுவதைத் தொடர்வதற்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
தடுப்பூசி மையங்கள் நாடளாவிய ரீதியில் தொடர்ந்து செயல்படும். மேலும் முதல் மற்றும் இரண்டாவது டோஸ் பெற வேண்டியவர்கள் தங்களுக்கு நெருக்கமான மையங்களுக்குச் செல்லலாம் என்றார்.
இதற்கிடையில், தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்கனவே பொலிஸ்மா அதிபருக்கு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. R
17 minute ago
23 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
23 minute ago
34 minute ago