2026 மே 10, ஞாயிற்றுக்கிழமை

dd

இலங்கை​யர்களை இலக்கு வைத்து பேஸ்புக்கில் நிதி மோசடி

Editorial   / 2019 ஜூலை 21 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையர்களை இலக்கு வைத்து, பேஸ்புக் ஊடாக நிதி மோசடி நடவடிக்கைகள் இடம்​பெறுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிதி மோசடி தொடர்பில், கணினி அவசர நடவடிக்கைப் பிரிவுக்கு முறைபாடு கிடைத்துள்ளதாக, இதன் தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ரவிந்து மீகஸ்முல்ல தெரிவித்துள்ளார்.

பேஸ்புக்கில் இருக்கும் குறித்த பக்கத்தை லைக் செய்தவுடன் ஒரு இலட்சம் ரூபாய்  கடன் கிடைத்துள்ளதுடன், 25,000 ரூபாய் வைப்பிலிட வேண்டும் என்றும் தகவல்கள் வருவதாகவும் இதன் மூலமே மோசடி இடம்பெறுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Flash cash loan.lk  என்ற பெயரிலுள்ள பேஸ்புக் கணக்கிலேயே இவ்வாறான நிதி மோசடி இடம்பெறுவதாகவும், இந்த மோசடி தொடர்பில், கணினி அவசர நடவடிக்கைப் பிரிவு விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .