2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

இலங்கை வந்தது ’’​சமுத்ரா அவிஜான்’’

Kamal   / 2019 செப்டெம்பர் 07 , பி.ப. 02:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்ளாதேஷ் கடற்படைக் கப்பலான  "​சமுத்ரா அவிஜான்" நல்லிணக்க பயணமாக இலங்கை வந்துள்ளது. கொழும்பு துறைமுகத்துக்கு வந்துள்ள இந்த கப்பல் இலங்கை கடற்படையின் சம்பிரதாயபூர்வமான மரியாதையகளுடன் வரவேற்கப்பட்டது.

இந்த கப்பலில் வந்துள்ள பங்களாதேஷ் கடற்படை குழுவினர் இலங்கை கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விளையாட்டு நிகழ்வுகளிலும் கலந்துகொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், மேற்படி வருகையின் போதான பயிற்சிகளின் கீழ் இலங்கை கடற்படைக்குச் சொந்தமான கப்பலொன்றின் மீது பங்களாதேஷ் ஹெலிகொப்டர் ஒன்றை இறக்கும் பயிற்சிகளும் இடம்பெறும் என அறிய முடிகிறது. 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .