2026 மே 02, சனிக்கிழமை

இலங்கையில் சிக்கியுள்ள 12,000 சுற்றுலாப்பயணிகள்

R.Maheshwary   / 2020 டிசெம்பர் 20 , பி.ப. 02:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலித ஆரியவன்ஸ

இந்த ஆண்டு மார்ச் 15ஆம் திகதிக்குப் பின்னர் எந்தவொரு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் இலங்கைக்கு வருகைத் தரவில்லை எனத் தெரிவித்த பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர், பஷில் ராஜபக்ஸ, ஆனால் இலங்கைக்கு வருகைத்தந்த 12,000 வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் இலங்கையில் சிக்கியுள்ளனரென, தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு சுற்றலாப் பயணிகளை இலங்கைக்கு வரவழைப்பதற்கான ஒழுங்குப்படுத்தல் வேலைத்திட்டம் இந்த மாதம் 26ஆம் திகதி ஆரம்பமாகும் என்றும் இந்நடவடிக்கை உத்தியோகப்பூர்வமாக நடைபெறாவிட்டாலும் உரிய பரிசோதனைகளின் பின்னர், அடுத்த வருடம் ஜனவரி 2ஆம் திகதியிலிருந்து உரிய சுகாதார பரிந்துரைகளின் கீழ், வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு அழைக்கப்படுவர் என்றார்.


 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .