2025 ஓகஸ்ட் 01, வெள்ளிக்கிழமை

இளைஞரின் சடலம் மீட்பு

Freelancer   / 2025 ஜூலை 31 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம், அச்சுவேலியில்  மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி இளைஞர், அருகில் உள்ள ஆலயத்தில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியில் கலந்துவிட்டு வீடு திரும்பும்போது வீட்டுக்கு முன்னால் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

இளைஞர் இவ்வாறான நிலையில் காணப்படுவதைப் பார்த்த உறவினர்கள் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று அனுமதித்த போதும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார்  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செல்வச்சந்திரன் மிமோஜன் எனும் 27 வயதுடைய இளைஞரே உயிரிழந்தவராவார். அவரது கால் பாதத்தில் பாம்பு தீண்டிய அடையாளம் காணப்படுகின்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .