2025 மே 02, வெள்ளிக்கிழமை

ஈரான் பிரஜைகளின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டது

Editorial   / 2019 ஜூன் 18 , மு.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

சில மாதங்களுக்கு முன்னர் 107 கிலோகிராம் ஹெரோய்னுடன், தென் கடற்கரைப் பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்ட ஈரானைச் சேர்ந்த 9 சந்தேகநபர்களினதும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் இன்று கொழும்பு பிரதான நீதவான்  லங்கா ஜயரத்ன முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே, சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அடுத்த மாதம் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில், மேலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவினர் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X