2026 மே 07, வியாழக்கிழமை

உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு

Mayu   / 2026 மே 07 , பி.ப. 01:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

லாஃப்ஸ் எரிவாயு   (LAUGFS Gas) விலையேற்றத்தைத் தொடர்ந்து, அந்த எரிவாயுவைப் பயன்படுத்தும் உணவகங்களில் உணவு மற்றும் பானங்களின் விலைகளை அதிகரிப்பதாக உணவக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் இது தொடர்பாகத் தெரிவிக்கையில், இன்று (07) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பின்வரும் விலை அதிகரிப்புகள் மேற்கொள்ளப்படுவதாகக் குறிப்பிட்டார்:

சோறு (Rice), பிரியாணி மற்றும் நாசி கோரெங்: 25 ரூபாயினால் அதிகரிப்பு.

பால் தேநீர்: 10 ரூபாயினால் அதிகரிப்பு.

சாதாரண தேநீர் (Plain Tea): 5 ரூபாயினால் அதிகரிப்பு.

சிற்றுண்டிகள் (Short Eats): 5 ரூபாயினால் அதிகரிப்பு.

அதேவேளை, முட்டை ரொட்டி மற்றும் பராட்டா போன்ற உணவுப் பொருட்களின் விலைகளில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

எரிவாயுவைப் பயன்படுத்தும் சுமார் 25% முதல் 30% வரையான உணவகங்கள் மற்றும் சிறிய உணவுச்சாலைகள், அதிகரித்துள்ள எரிபொருள் செலவைச் சமாளிக்க முடியாமல் திணறி வருவதாக ஹர்ஷன ருக்ஷான் சுட்டிக்காட்டினார். இதன் காரணமாகவே இந்த விலை அதிகரிப்பு தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளதாக அவர் மேலும் விளக்கமளித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .