2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

ஊடகவியலாளர்களை அச்சுறுத்தவில்லை: பிரதமர்

Menaka Mookandi   / 2016 ஜனவரி 29 , பி.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

'நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையின் போது, ஊடகவியலாளர்கள் பலரது பெயர்களைக் குறிப்பிட்டேனே தவிர, அவர்களை நான் அச்சுறுத்தவில்லை' என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்து கருத்துரைத்த அவர், 'நான் நேற்று நடத்திய உரையின் பின்னர், ஊடகவியலாளர்களை நான் அச்சுறுத்தினேன் என்று சிசிர ஜயகொடி எம்.பி தெரிவித்துள்ளார். அவர் கூறும் வகையில், நான் ஊடகவியலாளர்களை அச்சுறுத்தவில்லை.சில ஊடகவியலாளர்களின் பெயரைக் குறிப்பிட்டேன். காரணம், அவர்கள் பின்னால் இருப்பவர்கள் யார் என்பதை விளக்குவதற்காக. தவிர, நான் யாரையும் அச்சுறுத்தவில்லை' என்று பிரதமர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X