2026 மே 10, ஞாயிற்றுக்கிழமை

dd

ஊரடங்கு கால அனுமதிப்பத்திரங்களுக்கு வரையறை

Editorial   / 2020 மார்ச் 31 , மு.ப. 08:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் அதனுடன் தொடர்புடைய அனுமதிப்பத்திரங்களை வழங்கும் நடவடிக்கையை தற்காலிகமாக வரையறுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

தெரிவு செய்யப்பட்ட தரப்பினருக்கு மாத்திரம் குறித்த ஊரடங்கு அனுமதிப்பத்திரத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

ஊடகங்களுக்கு விடுத்துள்ள விசேட அறிக்கையில் அவர் இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வெளிநாடுகளில் இருந்து வந்து தனிமைப்படுத்தல் தொடர்பில் பதிவு செய்யாதவர்கள் தம்மை பதிவுசெய்ய நாளை (01) நண்பகல் வரை மாத்திரமே அவகாசம் வழங்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .