2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை

’எதிரணிக்கு தேவையான விதத்தில் நாட்டை முடக்க முடியாது’

J.A. George   / 2020 நவம்பர் 02 , பி.ப. 01:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனிப்பட்ட நபர்களின் தேவைக்கு அமைய நாட்டில் பொருளாதாரத்தை நாசப்படுத்தும் வகையில் தீர்மானம் எடுத்து, முழு நாட்டையும் முடக்க அரசாங்கம் தயாராக இல்லை என, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று (02) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கட்சியின் பொதுச்செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் இதனை கூறியுள்ளார்.

தற்போதைய நிலைமை குறித்து எதிரணியினர் பல்வேறு குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போதைய சூழ்நிலையை எதிர்கொண்டு நாடு முடக்கப்பட தேவையேற்பட்டால், மிக முக்கியமான தருணத்திலேயே அதற்கான முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .