2025 ஜூன் 25, புதன்கிழமை

எதிர்க்கட்சி தலைவருக்கு விளக்கமறியல்

Editorial   / 2019 ஓகஸ்ட் 07 , பி.ப. 12:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீர்கொழும்பு நகர சபையின் எதிர்க்கட்சி தலைவர் ரொயிஸ் பெர்னாண்டோவை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதத்தில் கட்டான பிரதேசத்தில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பாக கடந்த மாதம் 8ஆம் திகதி நீர்கொழும்பு நகரத்தில் வைத்து கட்டான பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.

பின்னர் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ரொய்ஸ் விஜித பெர்ணான்டோ இன்று(07) மீண்டும் நீர்கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதன்போது சந்தேகநபரான ரொய்ஸ் விஜித பெர்ணான்டோவை எதிர்வரும்2 1 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க  உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .