Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Freelancer / 2025 மார்ச் 08 , பி.ப. 08:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த ஆண்டு மகளிர் தினத்தன்று பொல்துவ சந்தியில் நடைபெற்ற போராட்டத்தின் போது தண்ணீர் பீச்சி தாக்குதலுக்கு ஆளான பிறகு, பாராளுமன்றத்திற்கு வந்ததை பிரதமர் ஹரிணி அமரசூரிய சனிக்கிழமை (08) பாராளுமன்றத்தில் நினைவு கூர்ந்தார்.
"கடந்த வருடம் மார்ச் 8 ஆம் திகதி எனக்கு நினைவிருக்கிறது. அன்று பொல்துவவில் நடந்த போராட்டத்தின் போது இங்குள்ள எங்கள் பெண் எம்.பி.க்கள் மீது தண்ணீர் பீச்சியடித்து தாக்கப்பட்டனர்.
தண்ணீரால் தாக்கப்பட்ட பிறகு அன்று நான் பாராளுமன்றத்திற்கு வந்தேன். பூந்தொட்டிகளை மிதித்ததற்காக எங்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு இன்னும் விசாரிக்கப்படுகிறது.
நான் பிரதமராக இருந்தபோது கூட, அதற்கு நான் பொறுப்புக் கூற வேண்டியிருந்தது. அந்தப் போராட்டங்கள் மூலம்தான் நாங்கள் இங்கு வந்தோம்.
"76 ஆண்டுகால சாபத்தைப் பற்றி நாம் பேசும்போது, ஒரு அரசியல் சாபத்தைப் பற்றிப் பேசுகிறோம். இல்லையெனில், உலகம் மாறிவிட்டதால் நாட்டில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியை நாம் புறக்கணிக்க மாட்டோம்" என்று பிரதமர் கூறினார். R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
20 May 2025