Freelancer / 2025 டிசெம்பர் 27 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
எலிக் காய்ச்சல் காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் துன்னாலை தெற்கு, வேம்படிப் பகுதியைச் சேர்ந்த சிங்கராஜா சிவராஜசிங்கம் (வயது 66) என்ற நான்கு பிள்ளைகளின் தந்தையாவார்.
மூன்று நாட்கள் காய்ச்சல் காரணமாக கடந்த வியாழக்கிழமை காலை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், அன்றைய தினம் மாலை உயிரிழந்துள்ளார்.
இந்த மரணம் தொடர்பில் கரவெட்டி திடீர் மரண விசாரணை அதிகாரி வேலுப்பிள்ளை பாஸ்கரன் விசாரணைகளை மேற்கொண்டார். சாட்சிகளை நெல்லியடி பொலிஸார் நெறிப்படுத்தினர். (a)
2 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago