Simrith / 2025 ஒக்டோபர் 30 , மு.ப. 11:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
தண்ணீர் போத்தல்களில் SLS தயாரிப்பு சான்றிதழ் முத்திரையை கட்டாயமாக்கும் நுகர்வோர் விவகார அதிகாரசபையின் புதிய உத்தரவு, ஏப்ரல் 1, 2026 முதல் அமலுக்கு வருவதாக மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபை (CEA) தெரிவித்துள்ளது.
பொதுமக்களின் பாதுகாப்பை, குறிப்பாக குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய சுற்றுப்புற அதிகாரசபை ஒரு அறிவிப்பை வெளியிட்டது.
CEA இன் படி, SLS சான்றிதழ் முத்திரையைக் கொண்டிருக்க வேண்டிய தயாரிப்புகள் பின்வருமாறு;
2003 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க நுகர்வோர் விவகார அதிகாரசபைச் சட்டத்தின் பிரிவு 12(1) இன் கீழ், மத்திய சுற்றாடல் அதிகாரசபை மேலும் சுட்டிக்காட்டியது:
மேலும், விதிமுறைகளுக்கு இணங்காத போத்தல்களை விற்பனை செய்தல், தயாரித்தல், பக்கேஜிங் செய்தல், போக்குவரத்து, களஞ்சியப்படுத்தல், இறக்குமதி செய்தல், விநியோகித்தல் அல்லது காட்சிப்படுத்துதல் கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது என்றும் CEA எச்சரித்தது.
ஒக்டோபர் மாத தொடக்கத்தில், நுகர்வோர் விவகார அதிகாரசபை, குடிப்பதற்கு ஏற்ற திரவங்களை எடுத்துச் செல்வதற்காக உள்ளூரில் தயாரிக்கப்பட்ட மீண்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் போத்தல்கள் மற்றும் பொலிமர் பொருட்களால் செய்யப்பட்ட உணவூட்டல் போத்தல்களை ஒழுங்குபடுத்துவது குறித்த வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டது.
இதன் மூலம் இலங்கை தரநிலைகள் நிறுவனத்தால் வழங்கப்பட்ட SLS தயாரிப்பு சான்றிதழ் முத்திரையை அவர்கள் வைத்திருக்க வேண்டும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .