2025 ஜூலை 07, திங்கட்கிழமை

ஏப்ரல் 21 குண்டு தாக்குதல்; 6 பேரின் விளக்கமறியல் நீட்டிப்பு

Editorial   / 2020 ஜனவரி 31 , பி.ப. 12:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த வருடம் ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற குண்டு தாக்குதல் சம்பவம் தொடர்பில்  6 பேரின் விளக்கமறியல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு சங்ரில்லா ​ஹோட்டலில் தற்கொலை குண்டுதாக்குதலை மேற்கொண்ட மொஹமட் ஹில்ஹாம் அஹமட் என்ற குண்டுதாரியின் தந்தை உள்ளிட்ட 6 பேரை, எதிர்வரும் 14 ஆம் திகதி வரையில் மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு  உத்தரவிடப்பட்டுள்ளது.

கொழும்பு நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை இன்று (31) பிறப்பித்துள்ளது.

சந்தேக நபர்கள் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .