2025 ஜூன் 23, திங்கட்கிழமை

ஐ.நாவின் விசேட அறிக்கையாளர் இலங்கைக்கு விஜயம்

Editorial   / 2019 ஜூலை 18 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய நாடுகளின் அமைப்பின் விசேட அறிக்கையாளர் க்ளேமன்ட் நைலெட்சோசி இன்று இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

9 நாள்கள் இலங்கையில் தங்கியிருக்கும் இவர், இலங்கையின் தற்போதைய நிலையைத் தொடர்பில் ஆய்வு செய்யவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் உள்ளிட்ட முக்கிய சவால்களுக்கு நாடு முகங்கொடுத்துள்ள சந்தர்ப்பத்தில் மக்களின் சுதந்திரங்களை மேலும் பலப்படுத்துவதற்காக, இந்த விஜயம் உதவும் என்றும் க்ளேமன்ட் தெரிவித்துள்ளார்.

இவரது இந்த விஜயத்தின் போது, அரச அதிகாரிகள், நீதிமன்றங்கள், ஊடகங்கள், சிவில் அமைப்புகள், தொழிற்சங்கங்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகளையும் இலங்கை  மனித உரிமைகள் ஆணைக்குழு உறுப்பினர்களையும் சந்திக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .