2024 மே 22, புதன்கிழமை

ஐக்கிய மக்கள் சக்தியில் இணையவில்லை: அர்ஜுன ரணதுங்க

J.A. George   / 2024 மே 03 , மு.ப. 09:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

தான்  ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்ததாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

தலவாக்கலை பிரதேசத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகளின் பங்குபற்றுதலுடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மே தினக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க அண்மையில் இணைந்துகொண்டிருந்தார்.

எவ்வாறாயினும், பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரத்தின் அழைப்பின் பேரில் தான் இந்த பேரணியில் கலந்து கொண்டதாகவும் அது ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்ததாக அர்த்தப்படாது என, அர்ஜுன ரணதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .