2025 ஜூன் 28, சனிக்கிழமை

ஐஸ் போதைப்பொருளுடன் இந்தியப் பிரஜை கைது

Editorial   / 2019 செப்டெம்பர் 19 , பி.ப. 02:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

06. டீ.கே.ஜீ.கபில

ஐஸ் போதைப்பொருளை, இந்தியாவிலிருந்து இலங்கைக்கு எடுத்துவந்த, இந்தியப் பிரஜையொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று (19) அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.

விமான நிலையத்திலிருந்து குறித்த நபர் வெளியேறும்போது, அவர் மீது சந்தேகம் கொண்ட சுங்கப் பிரிவினர், அவரது பயணப் பொதியை சோதனையிட்டபோதே,  864.215 கிராம் நிறையுடைய, ஐஸ் போதைப்பொருள்  கைப்பற்றப்பட்டுள்ளது.

29 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பில், கட்டுநாயக்க விமான நிலைய மேலதிக சுங்கப் பணிப்பாளர் நாயகத்தின் ஆலோசனைக்கமைய, பணிப்பாளர் தலைமையிலான குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .