R.Maheshwary / 2020 டிசெம்பர் 29 , மு.ப. 10:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
அடுத்த வருடத்திலிருந்து அரச பணியாளர்கள் ஒரு நாளைக்காவது பத்திக் ஆடையை அணிந்து, கடமைகளுக்கு சமூகமளிக்குமாறு, பத்திக் கைத்தொழில் மற்றும் தேசிய ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர அரச பணியாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
தேசிய ஆடை உற்பத்தியைப் பாதுகாத்தல், தேசிய ஆடைத்துறையில் புதிய தொழில்வாய்ப்பு தலைமுறை மற்றும் ஆடைகளுக்காக வருடாந்தம் வெளிநாடுகளுக்குச் செல்லும் உள்ளுர் பரிமாற்றத்தை தடுக்கும் நோக்கில் இந்தக் கோரிக்கையை விடுப்பதாக அமைச்சர் தயாசிறி தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, அரச பணிகளில் ஈடுபட்டுள்ள 3 மில்லியனுக்கும் அதிகமானவர்களின் ஒத்துழைப்பை இதற்காக வழங்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .