2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

’ஒழுக்காற்று குழுவை புறக்கணித்தால் எம்.பி.பதவிக்கு ஆபத்து’

Editorial   / 2019 செப்டெம்பர் 15 , பி.ப. 01:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒழுக்காற்று குழு முன்னிலையில் தாம் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிக்க முடியாத பட்சத்தில்  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடா அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்படும் என, கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர எம்.பி தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐந்து பேர்,  அரசாங்கம் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவு தெரிவித்து  இணைந்துகொண்டனர்.

இதனையடுத்து, குறித்த ஐவரும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள்  என்ற நிலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன, எஸ்.பி.திசநாயக்க, டிலான் பெரேரா, ஏஎச்எம்.பௌசி, விஜித் விஜயமுனி சொய்சா ஆகிய ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், தம் மீதான குற்றச்சாட்டுகளுக்கு 7 நாட்களுக்குள் கருத்து வழங்குமாறு தெரிவித்திருந்த போதும், அவர்கள் வழங்கிய காரணங்கள் ஏற்றுக்கொள்ளுமளவில் இல்லை என்பதால், அவர்களுக்கு எதிரான ஒழுக்காற்று  நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக தயாசிறி ஜயசேகர எம்.பி தெரிவித்தார்.

ஒழுக்காற்று குழு முன்னிலையில் தங்கள் குற்றமற்றவர்கள் என நிரூபிக்க முடியாத பட்சத்தில் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்படும் என்றும், ஒழுக்காற்று விசாரணைகளை புறக்கணித்தால் நாடாளுமன்ற உறுப்புரிமையை நீக்க சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .