Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 மார்ச் 25 , மு.ப. 09:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணத்தில் சைக்கிளில் சென்றவரை ஓட்டோ மோதியதில் படுகாயமடைந்த குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
நாவற்குழி, புதிய குடியேற்றத் திட்டத்தைச் சேர்ந்த ஆறு பிள்ளைகளின் தந்தையான அந்தோணி றில்மன் டெனிஸ் (வயது 44) என்பவரே உயிரிழந்துள்ளார்.
நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை நாவற்குழி - பூநகரி வீதி வழியாக மனைவி ஒரு சைக்கிளில் முன்னே செல்ல உயிரிழந்த கணவன் பிறிதொரு சைக்கிளில் 10 மாதக் குழந்தையை முன் கூடையில் இருத்திச் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வேகமாக வந்த ஓட்டோ, சைக்கிளை மோதி தலைகீழாகப் புரண்டது.
இதன்போது குழந்தை தூக்கி வீசப்பட்ட நிலையில் சிறு காயம் ஏற்பட்ட நிலையில் தப்பித்தது.
தந்தை படுகாயங்களுடன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று திங்கட்கிழமை பிற்பகல் 4:30 மணியளவில் சிகிச்சை பலனன்றி உயிரிழந்தார். (a)
5 hours ago
26 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
26 Jul 2025