2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

ஓட்டோவில் திடீர் தீப்பரவல்

Editorial   / 2019 ஜூலை 29 , பி.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுளை – மஹியங்கனை பிரதான வீதியில் மெடிதலே பிரதேசத்தில் ஓட்டோ ஒன்று திடீரென  தீப்பற்றி எரிந்துள்ளது.

கிந்துருகோட்டை பிரதேசத்திலிருந்து பண்டாரவெல நோக்கி பயணம் செய்த குறித்த ஓட்டோவில், கணவன், மனைவி, அவர்களது குழந்தை, ஓட்டோவின் சாரதியென நால்வர் பயணம் ​செய்துள்ளனர்.

ஓட்டோவின் பின்னால் தீ பரவியதை அவதானித்த சாரதி, கீழிறங்கி, பயணம் செய்த மூவரையும் உடனடியாக கீழே இறங்கச் செய்துள்ளார். பின்னர் குறித்த ஓட்டோ முழுவதுமாக தீப்பரவியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .