2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

ஓட்டோவில் வந்தவர் சைக்கிளில் தப்பி ஓட்டம்

Janu   / 2024 ஏப்ரல் 08 , பி.ப. 01:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டியை திருடி சென்ற ஒருவரை பொலிஸார் மடக்கி பிடிக்க முற்பட்ட போது , சந்தேகநபர் வீதியால் சென்ற மாணவனின் துவிச்சக்கர வண்டியை பறித்துக்கொண்டு  தப்பி சென்றுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது .

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு  சென்ற ஒருவர் தனது முச்சக்கர வண்டியை அருகில்  நிறுத்தி விட்டு , மருத்துவ மனைக்கு சென்று திரும்பிய போது தனது முச்சக்கர வண்டி களவாடப்பட்டதை அறிந்து அது தொடர்பில் உடனடியாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். 

முறைப்பாட்டையடுத்து யாழ்.மாவட்டத்தில் உள்ள ஏனைய பொலிஸ் நிலையங்களுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது .

இந் நிலையில்  களவாடப்பட்ட முச்சக்கர வண்டி,  யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை வீதியில் இணுவில் மத்திய கல்லூரிக்கு முன்பாக பயணித்த போது , அதனை அப்பகுதியில் கடமையில் இருந்த போக்குவரத்து பொலிஸார் கண்ணுற்று , முச்சக்கர வண்டியை வழிமறித்துள்ளனர். 

அப்போது சந்தேக நபர் முச்சக்கர வண்டியை   கைவிட்டு  ,  வீதியில் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த மாணவனின் துவிச்சக்கர வண்டியை பறித்துக்கொண்டு அதில் தப்பியோடியுள்ளார். 

முச்சக்கர வண்டியை மீட்ட பொலிஸார் , தப்பி சென்றவரை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதுடன் மாணவனிடமும் துவிச்சக்கர வண்டி பறிமுதல் செய்யப்பட்டமை தொடர்பில் வாக்கு மூலத்தை பெற்றுள்ளனர்.

எம்.றொசாந்த் 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X