2025 மே 17, சனிக்கிழமை

கொள்ளையரை கண்டுப்பிடிக்க உதவினால் ரூ.5 இலட்சம் சன்மானம்

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 08 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜா-எல பகுதியிலுள்ள நகைக்கடையில் கொள்ளையடித்துச் சென்ற கொள்ளையரை இனங்கண்டு தங்களிடம் ஒப்படைக்கும் பட்சத்தில் அவர்களுக்கு நகை கடை உரிமையாளரால் 5 இலட்சம் ரூபாய் சன்மானமாக வழங்கப்படும் என்று  ஜா-எல பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,

கடந்த ஓகஸ்ட் மாதம் 15ஆம் திகதி, ஜா-எல பகுதியிலுள்ள நகை கடையொன்றுக்குள் நுழைந்த கொள்ளையர்கள் அங்கு பணிபுரிந்த இரண்டு பெண்களை கத்தி முனையால் மிரட்டி, அங்கிருந்த 6 இலட்சம் ரூபாய் பணத்தையும் 53,760,000 ரூபாய் பெறுமதியான தங்க நகைகளையும் கொள்ளையடித்துக்கொண்டு தப்பிச்சென்றுள்ளனர்.

எனினும், இவ்வாறு கொள்ளையடித்தவர்களின் அடையாளம், நகைக்கடைக்கும் அருகில் இருந்த வர்த்தக நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.கமராவில் பதிவாகியுள்ளது.

இந்த ஆதாரத்தை வைத்துக்கொண்டு தற்போது நகைக்கடை உரிமையாளரும் பொலிஸாரும் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். 

வழங்கப்பட்டுள்ள புகைப்படத்திலுள்ளவர்களை இனங்கண்டு அவர்களை தங்களிடம் ஒப்படைக்கும் பட்சத்தில் அவர்களுக்கு 5 இலட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

தகவல் தரவேண்டிய அலைபேசி இலக்கங்கள்:

சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் - 071-8591589
உதவி பொலிஸ்மா அதிபர்- களனி-  071-8591594
பொலிஸ் ஊடகப்பிரிவு -011-2327227
ஜா-எல பொலிஸ் நிலையம்- 011-2236222, 011-2239131 
ஜா-எல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி -071-8591603
குற்றப்பலனாய்வு தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி -078-538291


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .