2025 ஜூன் 28, சனிக்கிழமை

கஞ்சிபான இம்ரானிடம் குரல் பரிசோதனை

Editorial   / 2019 செப்டெம்பர் 19 , பி.ப. 12:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக்குழு உறுப்பினரான கஞ்சிபான இம்ரான், அரச இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்துக்கு இன்று (19) அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

அலைபேசியில் பொலிஸ் அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகளுக்கு அமைய குரல் பரிசோதனை மேற்கொள்வதற்காகவே அவர் அங்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார்.

வெளிநாடு ஒன்றில் இருந்து பொலிஸ் அதிகாரிகள் இருவருக்கு கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் தற்போது சிறைவாசம் அனுபவித்து வருகிறார்.

கஞ்சிபான இம்ரானை, குரல் பதிவுக்காக அரச இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் இன்று முன்னிலைபடுத்துமாறு கொழும்பு பிரதம நீதவான்நீதிமன்றம் கடந்த 17 ஆம் திகதி உத்தரவிட்டிருந்தது.

அத்துடன், கஞ்சிபான இம்ரானை எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .