2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

கட்சித் தலைவர்கள் கூட்டம் நாளை

Editorial   / 2020 பெப்ரவரி 11 , மு.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்களுக்கான கூட்டம் நாளை (12) நடைபெறவுள்ளது.

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பிற்பகல் 03 மணிக்கு நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இந்தக்கூட்டம் இடம்பெறவுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க ஊடாக நாடாளுமன்றத்துக்கு வழங்கப்பட்டுள்ள குரல் பதிவுகளை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பெற்றுக்கொடுப்பது தொடர்பில் இதன்போது அவதானம் செலுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன, எதிர்வரும் வாரத்துக்கான ஒழுங்குப்பத்திரம் உருவாக்குவது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.

நாடாளுமன்றம் எதிர்வரும் 18ஆம் திகதி பிற்பகல் 1 மணிக்கு கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .