Editorial / 2025 செப்டெம்பர் 07 , பி.ப. 02:35 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஒரு வீட்டில் மனைவி ஒருவர் தனது கணவரை கோடரியால் வெட்டி கொலை செய்துவிட்டு, தனது மூன்று குழந்தைகளுடன் பொலிஸில் சரணடைந்ததாக கெபத்திக்கொல்லாவ பொலிஸ் நிலையகம் தெரிவித்துள்ளது.
கெபத்திக்கொல்லாவ பொலிஸ் பிரிவில் உள்ள குருலுகமவைச் சேர்ந்த மூன்று குழந்தைகளின் தாய் (வயது 36 ) பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். உயிரிழந்தவர் கெபத்திக்கொல்லாவ வ, குருலுகம, உக்குவவைச் சேர்ந்த மூன்று குழந்தைகளின் தந்தையான உபாலி ஹேரத் (46) என்பவர் ஆவார்.
தனது மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது, மனைவியை வாளால் தாக்க முயன்றதாகவும், கோடரியால் கணவனின் தலையில் தாக்கியதில், கணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
14 minute ago
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
3 hours ago
3 hours ago
4 hours ago