Niroshini / 2021 மே 13 , மு.ப. 04:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
கண்டறியப்படாத புதிய கொரோனா வைரஸ் வகைகள், சமூகத்தில் இருக்கக்கூடும் என்று, சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
கொரோனா வைரஸின் புதிய திரிபுகளைக் கொண்ட நபர்கள் சமூகத்தில் இருக்க வாய்ப்புள்ளது எனத் தெரிவித்துள்ள சுகாதார அமைச்சின் தலைமை தொற்றுநோயியல் நிபுணர் டொக்டர் சுதத் சமரவீர, இலங்கைக்கு வருபவர்கள் அனைவருக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மேலதிக ஆய்வுகளுக்காக, அவர்களிடமிருந்து மாதிரிகள் எடுக்கப்படுவதாகவும் கூறியுள்ளார்.
தனிமைப்படுத்தல் நிலையமொன்றில் இருந்த ஒரு நபரிடமிருந்து, கொரோனா வைரஸின் இந்திய திரிபு கண்டறியப்பட்டுள்ளது என்றும், ஆரம்ப கட்டங்களில் புதிய திரிபைக் கண்டறியாதவர்கள், இப்போது சமூகத்துடன் சுற்றி வருவதற்கான வாய்ப்பு உள்ளதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .