2025 ஜூன் 25, புதன்கிழமை

கம்போடியாவை சென்றடைந்தார் ஜனாதிபதி

Editorial   / 2019 ஓகஸ்ட் 07 , பி.ப. 12:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கும் கம்போடியாவுக்குமிடையில் இருந்துவரும் நீண்டகால உறவுகளை, புதிய துறைகளுக்கு விரிவுபடுத்தி, பரஸ்பர நன்மைகளை மேலும் அதிகரிக்கும் நோக்குடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கம்போடியாவுக்கு பயணமானார்.

கம்போடிய அரசாங்கத்தின்  விசேட அழைப்பின்பேரில் கம்போடியாவிற்கு பயணமான ஜனாதிபதி இன்று (07) முற்பகல் Phnom Penh சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார். ஜனாதிபதியை கம்போடியா நாட்டின் பிரதிப் பிரதமர் மற்றும் அந்நாட்டின் தகவல்துறை அமைச்சர் Khieu Kanharith உள்ளிட்ட அந்நாட்டின் உயர்மட்டப் பிரதிநிதிகள் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

தனது இந்த விஜயத்தின்போது ஜனாதிபதி, கம்போடியா நாட்டின் மன்னர் Norodom Sihamoni ஐ சந்திக்கவுள்ளதுடன், கம்போடியாவின் பிரதமர் Hun Sen உள்ளிட்ட அந்நாட்டின் உயர்மட்டப் பிரதிநிதிகளுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளையும் மேற்கொள்ளவுள்ளார்.

இருநாடுகளுக்கிடையிலான பொருளாதார, வர்த்தக, சுற்றுலா மற்றும் பௌத்த சமய தொடர்புகளை விரிவுபடுத்துவது பற்றி இதன்போது விசேட கவனம் செலுத்தப்படவுள்ளதுடன், இவை தொடர்பான புதிய உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்படவுள்ளன.

இதேவேளை ஜனாதிபதி இன்று பிற்பகல் இலங்கை கம்போடிய வர்த்தக மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்விலும் கலந்துகொள்ளவுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .