2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

கிரிஉல்ல விபத்தில் ஓட்டுநர் மரணம்

Editorial   / 2025 டிசெம்பர் 23 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

 

குருநாகல் - கிரிஉல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாரம்மல - கிரிஉல்ல வீதியில் முத்துகல பகுதியில்,  செவ்வாய்க்கிழமை (23) அன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கிரிஉல்லவில் இருந்து நாரம்மல நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள், எதிர் திசையில் வந்த டிப்பர் லொரியுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.  

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பலத்த காயமடைந்து தம்பதெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X