2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

கர்ப்பிணிகள், தாய்மார்கள் கவனம்

Editorial   / 2019 மார்ச் 23 , பி.ப. 12:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

கர்ப்பிணி தாய்மார் அல்லது பிரசவத்துக்குப் பின்னர் தாய்மாருக்கு காய்ச்சல் ஏற்பட்டால், முதல் நாளிலேயே வைத்தியசாலையில் சேர்க்கப்பட வேண்டும் என, சுகாதார அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளது.

தற்பொழுது பரவி வரும் டெங்கு, இன்புளுவென்சா நோயால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி தாய்மார், ஏனையவர்களிலும் பார்க்க அபாய நிலைக்கு உள்ளாகக்கூடும் என்றும் தொண்டைக்கும் பாதிப்பு ஏற்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடும்ப சுகாதார பணியகத்தின் தகவல்களுக்கு அமைவாக, இன்புளுவென்சா நியுமோனியா ஆகியவற்றால், இந்த வருடத்தில், இதுவரைக்கும் இரண்டு தாய்மார் உயிரிழந்துள்ளனர்.

அத்தோடு, 2018ஆம் ஆண்டில், 11 கர்ப்பிணிப் பெண்கள், நியுமோனியா காரணமாக உயிரிழந்துள்ளனர். 2017ஆம் ஆண்டில், டெங்கு, இன்புளுவென்சா நோய் காரணமாக, 41 கர்ப்பிணித் தாய்மார் உயிரிழந்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X