2025 ஜூலை 14, திங்கட்கிழமை

கலஹா விவகாரம்: மேலுமிருவர் கைது

Editorial   / 2018 ஒக்டோபர் 19 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

கலஹா வைத்தியசாலையின் மீது தாக்குதல் நடத்தி, சேதங்களை ஏற்படுத்தினர் என்றக்குற்றச்சாட்டின் கீழ், மேலும் இருவரை கைதுசெய்துள்ளதாக, கலஹா பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, கலஹா வைத்தியசாலையில், பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்து, பொது சட்டத்தை மீறி, அமைதிக்குப் பங்கம் விளைவித்தனர் என்றக் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு, விளக்கமளியில் வைக்கப்பட்டுள்ள 10 பேரின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு, கண்டி நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (18) விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டபோதே, அவர்களை, எதிர்வரும் 25 ஆம் திகதி வரைக்கும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .