2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

களுத்துறையில் 32 பேருக்கு கொரோனா

Editorial   / 2020 ஏப்ரல் 12 , பி.ப. 06:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

களுத்துறை மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 20 பேர் பேருவளை பகுதியில் இனங்காணப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கொவிட் 19 தொற்றுக்குள்ளான நால்வர் இன்று (12) இனங்காணப்பட்டதுடன், இவர்கள் அனைவரும் பேருவளை பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

புணானை தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையத்தில் வைத்தே, இவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையில் கொவிட் 19 வைரஸால் பாதிக்கப்பட்டோரின்  எண்ணிக்கை 203 ஆக அதிகரித்துள்ளதாக, தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .