Editorial / 2025 டிசெம்பர் 19 , பி.ப. 03:08 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கீதபொன்கலன்
திருகோணமலை - கொழும்பு கோட்டை பகல்நேர நேரடி புகையிரத சேவை சனிக்கிழமை (20) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கி 7084 இலக்க புகையிரதம் காலை 7 மணிக்கு புறப்படும்,அதேவேளை கொழும்பு கோட்டையிலிருந்து 7083 இலக்க புகையிரதம் திருகோணமலை நோக்கி காலை 6 மணிக்கு புறப்படும்.
இரவு நேர ரயில் சேவையை மீள ஆரம்பிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது காலை நேர புகையிரத சேவை மட்டுமே இயங்கவுள்ளது. இரவு நேர புகையிரத சேவை இயங்குவது தொடர்பாக இதுவரை எவ்வித தகவல்களும் இல்லை.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .