2026 பெப்ரவரி 18, புதன்கிழமை

கொழும்பில் பல பகுதிகளுக்கு நீர் வெட்டு

S.Renuka   / 2026 பெப்ரவரி 18 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பத்தலேயில் இருந்து தெஹிவளை வரையிலான பிரதான குழாய் திடீரென உடைந்ததைத் தொடர்ந்து, புதன்கிழமை (18) அன்று கொழும்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள பல பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைபட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் (NWSDB) அறிவித்துள்ளது.

அதன்படி, மொரட்டுவ, ராவதவத்த, சொய்சாபுர, ரத்மலானை, தெஹிவளை, கல்கிஸ்ஸை, வெள்ளவத்தை, பாமன்கடை, முல்லேரியா மற்றும் கொலன்னாவை ஆகிய இடங்களில் நீர் விநியோகம் தடைபட்டுள்ளது.

இதே நேரத்தில், பத்தரமுல்லையில் வசிப்பவர்களுக்கு நீர் விநியோகம் குறைந்த அழுத்தத்தில் இருக்கும் என்று நீர் வழங்கல் வாரியம் தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .