Freelancer / 2023 ஓகஸ்ட் 18 , பி.ப. 02:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
முல்லைத்தீவு நீதிமன்றில் இருந்து பெறப்பட்ட நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் முல்லைத்தீவு குருந்தி ஆலய மைதானத்தில் பொங்கல் பூஜை நடத்துவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட குழுவினர் வந்துள்ளனர்.
இது சட்டவிரோதமானது என்று அதன் பங்களிப்பாளர்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததால், இரு தரப்பினருக்கும் இடையே சூடான வார்த்தைகள் பரிமாறிக்கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டது.
பின்னர் ஸ்தலத்திற்கு வந்த விகாரை பீடாதிபதி கல்கமுவ சாந்தபோதி தேரர் நீதிமன்ற உத்தரவு காரணமாக பொங்கல் பூஜையை நடத்த சந்தர்ப்பம் வழங்கியதுடன் இனிவரும் காலங்களில் இவ்வாறான ஒழுக்கக்கேடான செயல்களை செய்ய வேண்டாம் என பாராளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட குழுவினருக்கு அறிவித்துள்ளார்.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த முல்லைத்தீவு பொலிசார் நிலைமையை கட்டுப்படுத்தி பொங்கல் பூஜைக்கு பொருத்தமான இடத்தை தயார் செய்ய தொல்லியல் துறை அதிகாரிகளை வரவழைத்தனர்.
14 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
2 hours ago
3 hours ago